\
Live Updates : போரூர் சிறுமி கொலை வழக்கு தீர்ப்பு  #JusticeforHasini

Live Updates : போரூர் சிறுமி கொலை வழக்கு தீர்ப்பு #JusticeforHasini

Live Updates : போரூர் சிறுமி கொலை வழக்கு தீர்ப்பு #JusticeforHasini
Published on

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த  சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன்
தலைமறைவானார். தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்‌தது. விமான நிலையம்
அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார்
உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி  கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்பு குறித்த உடனுக்குடன் தகவல்களை இங்கே காணலாம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com