இந்தியாவைப் பொருத்தவரை கடந்த
2017 லிருந்து 2020ம் ஆண்டுவரை, 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 லட்சம்
டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகியுள்ளன. இதன்படி பார்த்தால், 2017-18ம் ஆண்டில் 7,08,445
டன்களும், 2018-19ம் ஆண்டில் 7,71,215
டன்களும், 2019-20ம் ஆண்டில் 10,14,961.21
டன் மின்னணுக் கழிவுகளும் உற்பத்தியாகியுள்ளன. உற்பத்தியான 25 லட்சம்
டன் மின்னணுக் கழிவுகளில் சுமார் 53.218 சதவிகித கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால்
நிலம், நீர், காற்றுமாசு என சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டு இந்தியாவின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும்.