மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறுகையில், ''மத்திய பாஜக அரசு விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் கொள்கையில் இறங்கியுள்ளது. சந்தைகளில் வெங்காயத்தை பற்றி தெரியாதவர்கள்தான் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளிடம் 5 ரூபாய்க்கு வாங்கி சந்தைகளில் 30 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் விற்கிறார்கள்.
சிறு, குறு விவசாயிகள் எல்லா காலங்களிலும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அதை தடுப்பதை விட்டு விவசாயத்தை வெளிநாட்டு வியாபாரிகளுக்கு தரைவார்க்க முயல்கிறார்கள்.