தமிழ்நாட்டில் 9% பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம்: 3 மாவட்ட ஆய்வில் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் 9% பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம்: 3 மாவட்ட ஆய்வில் அதிர்ச்சி
Drug
Drug Drug

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களில் 9% பேர் போதைபொருள் பழக்கத்துக்கு அடிமையாவதாக சென்ற வருடத்தின் ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

கடந்த வருடம் 'தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் எஜுகேஷன் (THE INSTITUTE OF SOCIAL EDUCATION) என்ற தனியார் அமைப்பு தமிழகத்தின் சென்னை, திருவண்ணாமலை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் பதின்பருவ பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது. 168 பள்ளிகளில் 3,021 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9% பேர் தாங்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

மது குடித்தல், கஞ்சா, போதை பாக்கு, புகையிலை, சிகெரட் என பலவகை போதை பொருள்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும், ஏழாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் வளர் இளம்பருவத்தினரிடையே தான் இப்பழக்கம் அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிகிறது.

போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களில், போதைக்காக 26% பேர் ஆல்கஹாலும், 23% பேர் கூல் லிப் பொருள்களையும், 22% பேர் புகையிலை பொருள்களையும் பயன்படுத்துகின்றனர். அதேபோல், ஒய்ட்னர், ரப்பர் போன்ற பொருள்களை 13% பேர் போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதை தவிர்த்து, கஞ்சாவை 10 சதவிகிதத்தினரும் பிற வகையான போதைப் பொருள்களை 6 சதவிகித மாணவர்களும் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

பள்ளியில் படிக்கும் சீனியர் மாணவர்களைப் பார்த்து சிறுவர்கள் இப்பழக்கதுக்கு ஈர்க்கப்படுவதும், பள்ளிகளுக்கு அருகிலேயே இருக்கும் சிறிய பெட்டிக்கடைகளில் போதைப் பாக்கு, புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் மிக எளிதாக கிடைப்பதும் தான் மாணவர்கள் தடம் மாற முக்கியக் காரணம் என்கிறார்கள் இது குறித்து வேதனை தெரிவிக்கும் பள்ளி ஆசிரியர்கள். தற்போது பொதுமுடக்கம் அமலில் இருக்கும் சூழலில் ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகு போதை பொருள்கள் கஞ்சா புகையிலை குறித்து இணையத்தில் தேடுவதும், அவை குறித்த பாடல்களை பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொதுமுடக்கம் முடிந்து ஒருவேளை பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வாய்ப்புகளாக இவை மாறக் கூடும் என்றும், சிறுவர்களுக்கு எளிதாக போதை பொருள்கள் கிடைக்ககூடியதாக சந்தேகிக்கப்படும் இடங்களை அரசு கண்கானித்து தீவிர சோதனை மேற்கொண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.

ஆசிரியர்களும் அரசாங்கமும் மட்டும் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறும் மனநல ஆலோசகர்கள், வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லை. அதனால் அவர்கள் திசை மாறிச் செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போவதைத்தான் முக்கியக் காரணமாகக் கூறுகிறார்கள்.

போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்ளும் மாணவர்களை அதிலிருந்து மீட்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மன ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து மீள உதவவும் பள்ளிகளில் மட்டுமல்லாது, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பளர்களை நியமிப்பது கட்டாயமாகிறது. இவை ஒருபுறமிருக்க தங்கள் பிள்ளைகள் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய முதல் கடமை பெற்றோருக்குத் தான் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com