பொதுவாக வளர்ப்பு யானைகள் முகாம் என்றாலே, யானைகளை கொடுமைப்படுத்தும் இடமாக கருதப்படும் சூழலில், அதை பொய்யாக்கும் வகையில் இருக்கிறது மக்னா யானை மூர்த்தியின் வாழ்க்கை முறை. 1990களில் 22 பேரை கொன்ற மூர்த்தி சர்வதேச அளவில் கவனம் பெற்ற யானை. மிகவும் மூர்க்கமாக இருந்த மூர்த்தியை பிடிக்கும் முயற்சியின் போது அதற்கு காயங்கள் ஏற்பட்டது. யானையை வனத்துறையினர் கொடுமைப்படுத்துவதாக சர்வதேச அளவில் குரல்கள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினரின் முயற்சியால் மூர்த்தி வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டு, தற்போது முகாமில் காட்டு யானையைப் போல் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறது.