\
பனிமூட்டத்துடன் ரம்யமான சூழல்: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

பனிமூட்டத்துடன் ரம்யமான சூழல்: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

பனிமூட்டத்துடன் ரம்யமான சூழல்: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்
Published on

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய ரம்யமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை வேளைகளில் வெப்பமான காலநிலையும், பிற்பகல் வேளைகளில் அடர் மேக மூட்டங்கள் சூழ்ந்தபனி மூட்ட காலநிலையும் கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது.

இந்நிலையில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஓரளவிற்கு மலைப்பகுதிகளுக்கு வரத்து வங்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் பனிமூட்டத்துடன் கூடிய கால நிலையில் குதிரை சவாரி, மிதி வண்டி சவாரி மற்றும் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com