வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அலங்கரிக்கும் வெளிநாட்டுப் பறவைகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அலங்கரிக்கும் வெளிநாட்டுப் பறவைகள்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அலங்கரிக்கும் வெளிநாட்டுப் பறவைகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலக பிரசித்தி பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் ஜுன், ஜூலை வரை சீசன் களைகட்டும். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதையடுத்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து கூழைக்கடா, வர்ண நாரை, பாம்புத்தாரா, நத்தை, கொத்தி நாரை, சாம்பல் நாரை, கரண்டிவாயன் உள்ளிட்ட 26 வகையான பறவைகள் பறவைகள் அக்டோபர் மாதத்தில் வரத் தொடங்கும் ஆண்டுதோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இந்த சரணாலயத்திற்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்.

இந்த பறவைகளை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் சரணாலயத்திற்கு வந்து பறவைகளை கண்டு ரசித்துச் செல்வார்கள். தற்போது சரணாலயத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளது. மேலும் ஏரியில் நீர் நிரம்பினால் பறவைகள் அதிக அளவு வரதொடங்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com