இந்தியாவில் 2016 முதல் 2019ஆம் ஆண்டுகளுக்கிடையில் ரயில்கள் மோதி 61 யானைகள் இறந்துள்ளதாக ராஜ்யசபாவில் சமர்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்ட வழித்தடத்தில் 37 யானைகளும், அடையாளம் காணப்படாத வழித்தடத்தில் 24 யானைகளும் ரயில்களில் அடிபட்டு மரணமடைந்துள்ளன.