\
18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை

18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை

18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை
Published on

18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு நாளைமுதல் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக, மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதிசெய்ய மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த சூழலில், அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுதான் கல்லூரிக்கு வரவேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். நாட்டிலேயே சென்னையில்தான் 90.11% ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com