நெட் தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கு குட் நியூஸ்

நெட் தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கு குட் நியூஸ்
நெட் தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கு குட் நியூஸ்

யூ.ஜி.சி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிகள், ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். வழக்கமாக நெட் தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்படும். இதில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு தேர்வுகளும் ஒன்றாக இம்முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் கடந்த 20ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று, வரும் 30ஆம் தேதி வரை நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com