அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழ்நாட்டில் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர ஆண்டுதோறும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு டான்செட் தேர்வு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது.



டான்செட் தேர்வில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வசதியாக நாளை அனைத்து கலை - அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com