டிகிரி படித்தவரா? 1,30,400 ரூபாய் வரை ஊதியம் - டிஎன்பிஎஸ்சி வேலை அறிவிப்பு

உதவி ஜெயிலர் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வேலை அறிவிப்பு
TNPSC Office
TNPSC OfficeTNPSC Website

ரூ.35,400 ரூபாயிலிருந்து 1, 30,400 வரையிலான ஊதியத்தில் டிஎன்பிஎஸ்சி வேலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சிறைகளில் காலியாக உள்ள உதவி ஜெயிலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இன்றிலிருந்து (ஏப்ரல் 12) மே மாதம் 15-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதனை மே மாதம் 18-ஆம் தேதி வரை சரிசெய்துகொள்ள முடியும்.

கல்வித்தகுதி

• யூஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், டிகிரி முடித்திருக்க வேண்டும்

• போதிய உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த பணியிடங்கள்: 59

ஆண்களுக்கான பணியிடங்கள்: 55

பெண்களுக்கான பணியிடங்கள்: 5

ஊதிய வரம்பு

ரூ.35,400 ரூபாயிலிருந்து 1, 30,400 வரை

எழுத்துத் தேர்வு நடைபெறும்: ஜூலை 1

காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வு நடைபெறும். Paper-I, Paper-II என இரண்டு தேர்வுகள் நடைபெறும்.

வயது வரம்பு விவரம்

Age Details
Age DetailsTNPSC Website

மேலும் இதுகுறித்த விரிவான தகவல்களை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/english/notification.aspx -யில் தெரிந்துகொள்ள முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com