குரூப் 1 தேர்வர்களுக்கு அரசே கொடுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள்! எங்கு நடக்கிறது தெரியுமா?

குரூப் 1 தேர்வர்களுக்கு அரசே கொடுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள்! எங்கு நடக்கிறது தெரியுமா?
குரூப் 1 தேர்வர்களுக்கு அரசே கொடுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள்! எங்கு நடக்கிறது தெரியுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் தேர்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. அவற்றுக்கான தற்காலிக விடைத்தாள்களும் வெளியிடப்பட்டன. இத்தேர்வுகளை தொடர்ந்து, குரூப் 1 தேர்வும் விரைவில் நடைபெற உள்ளது.

கடந்த ஜூலை மாதம், இதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கானதுதான் குரூப் 1 தேர்வு. இதற்கு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ந் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான நேரடி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (18-ம் தேதி) முதல் தொடங்குகின்றது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு நேரடியாக செல்லலாம்.

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

ஏ-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,

திரு.வி.க. தொழிற்பேட்டை,

கிண்டி,

சென்னை-32

சந்தேகங்களுக்கு 9361566648, 8072584856 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com