இன்று குரூப் 1 தேர்வுக்கான கடைசி தேதி... விண்ணப்பிக்காதவர்கள் முந்தவும்!

இன்று குரூப் 1 தேர்வுக்கான கடைசி தேதி... விண்ணப்பிக்காதவர்கள் முந்தவும்!
இன்று குரூப் 1 தேர்வுக்கான கடைசி தேதி... விண்ணப்பிக்காதவர்கள் முந்தவும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இன்று (22.08.2022) அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக இருக்கின்றது.

கடந்த ஜூலை மாதம், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கானதுதான் குரூப் 1 தேர்வு. இதற்கு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும், முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com