குரூப் 2 தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்த டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்த டிஎன்பிஎஸ்சி
குரூப் 2 தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்த டிஎன்பிஎஸ்சி

அரசு பணிக்கான குரூப்-2 பிரதான தேர்வு, இனி இரு தாள்களாக நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அறிவித்தது. அதாவது இரண்டு தேர்வுகளுக்கும் முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டன. பலரும் வரவேற்பு தெரிவித்தாலும் சில மாற்றங்கள் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதன்படி முதன்மை எழுத்துத்தேர்வில் டிஎன்பிஎஸ்சி தற்போது சில மாற்றங்களை செய்துள்ளது. 

முதன்மை எழுத்துத் தேர்வில் மொழி பெயர்த்தல் பகுதி மட்டும் முதல் தாளில் இடம்பெறும் எனவும், பிற பகுதிகள் இரண்டாம் தாளில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள, முதல்நிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் முதல் பகுதி, தனித்தாளாக மாற்றப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வில் தகுதி பெற, குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களைப் பெற வேண்டும். முதல் தாளில் குறைந்தப்பட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே, 2-ஆம் தாள் மதிப்பீடு செய்யப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

இத்தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள், தேர்வரின் RANK நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, குரூப் 2 தேர்வுகள் பட்டப் படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். 

இத்தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்றால், தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், மரபுகள், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள் உள்ளிட்டவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாக, அரசு பணியாள‌ர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com