41 புதிய அறிவிப்புகள் வரும்: அமைச்சர் செங்கோட்டையன்

41 புதிய அறிவிப்புகள் வரும்: அமைச்சர் செங்கோட்டையன்

41 புதிய அறிவிப்புகள் வரும்: அமைச்சர் செங்கோட்டையன்
Published on

மாணவர்கள் நலன் கருதி நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் 41 புதிய அறிவிப்புகள் வரும் 6ம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எதிர்காலத்தை கருதி இந்த அறிவிப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலத்தை கருதி வரும் 6ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிப் பார்க்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 10 மற்றும் 12ம் வகுப்பில் ரேங்கிங் முறை நீக்கம், 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு போன்ற நடவடிக்கைகளை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com