பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
Published on

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து இன்று வெளியான முடிவுகளில் மொத்தமாக 95.2 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றனர். இதில் 97 சதவித மாணவியர்களும், 93.3 சதவித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டில் மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவிதம் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், வேலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளன.

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்

திருப்பூர்- 98.53
ராமநாதபுரம்-98.48    
நாமக்கல்-98.45
ஈரோடு-98.41
கன்னியாகுமரி-98.08
புதுச்சேரி-98.01
விருதுநகர்-97.92
சிவகங்கை-97.42
பெரம்பலூர்-97.33
மதுரை-97.29
தூத்துக்குடி-96.95
அரியலூர்-96.71
புதுக்கோட்டை-96.51
திருச்சி-96.45
கோவை-96.44
உதகை-96.27
திருநெல்வேலி-96.23
தருமபுரி-96.00
தஞ்சை-95.92
கரூர்-95.61
திருவண்ணாமலை-95.56
சேலம்-95.04
காரைக்கால்-95.26
கிருஷ்ணகிரி-94.36
சென்னை-94.18
விழுப்புரம்-93.85
தேனி-93.50
திருவாரூர்-93.35
திருவள்ளூர்-92.91
கடலூர்-92.86
காஞ்சிபுரம்-92.45
திண்டுக்கல்-92.40
நாகை-90.41
வேலூர்-89.98

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com