சிபிஎஸ்இ ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை வழங்க அவகாசம் நீட்டிப்பு

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை வழங்க அவகாசம் நீட்டிப்பு
சிபிஎஸ்இ ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை வழங்க அவகாசம் நீட்டிப்பு

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான மதிப்பெண் பட்டியலை பள்ளிகள் இறுதி செய்து அனுப்ப மேலும் 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஜூலை 22 ஆம் தேதிக்குள் ப்ளஸ் 2 மாணாக்கர்களுக்கான மதிப்பெண் பட்டியலை இறுதிசெய்து அனுப்பிடுமாறு, பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அந்த காலக்கெடுவை மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்துள்ள சிபிஎஸ்இ, ஜூலை 25 ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை இறுதிசெய்து அனுப்பிட பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com