11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்?

11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்?
11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்?

11, 12ஆம் வகுப்பு மொழிப்பாடங்களின் தேர்வுகளை, இனி ஒரே தாளாக மாற்றி தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், தற்போது உள்ள கல்வித்திட்டத்தின் படி 11, 12ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு தாள் 1 , தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மொழிப்பாடங்களுக்கே 4 தேர்வுகள் எழுதுகின்றனர். இதுதவிர முக்கிய பாடங்களாக 4 உள்ளது. அவற்றையும் சேர்த்தால் மொத்தம் 10 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்களின் இந்த தேர்வுச் சுமையை குறைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக மொழிப்பாடங்களில் எழுதும் தாள் 1, தாள் 2 ஆகிய இரண்டையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 11, 12ஆம் வகுப்புகளில் உள்ள 4 முக்கிய பாடங்களின் எண்ணிக்கையை, மூன்றாக குறைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர டெல்லியிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com