\
9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு

9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு

9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு
Published on

9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மே 3 ஆம் தேதியிலிருந்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் 9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com