தலைமை செயலகம் நோக்கி பேரணி... தமிழ்நாடு ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் கூட்டணி தீர்மானம்!

“தேர்தலுக்கு முன் அறிவித்திருந்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட தமிழக அரசு தற்போதுவரை நிறைவேற்றவில்லை; ஆகையால் அடுத்த மாதம் 29ம் தேதி பேரணி செல்ல இருக்கிறோம்” ஆரம்பக்கல்வி ஆசிரியர் கூட்டணி.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 29ம் தேதி தலைமை செயலகத்தை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக தமிழ்நாடு ஆரம்பக்கல்வி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை என சங்கத்தின் பொது செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் கூட, தேர்தல் வாக்குறுதி ஒன்றைக்கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தியும் கோபமும் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் இருக்கிறது” என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com