தள்ளிப்போகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! அடுத்த அப்டேட்

தள்ளிப்போகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! அடுத்த அப்டேட்
தள்ளிப்போகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! அடுத்த அப்டேட்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட இருந்த நிலையில், அது தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2021 - 22ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அவர்களின் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி நிறைவு பெற்றது. தேர்வு அட்டவணை வெளியிடும் போதே முடிவுகள் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாமல், அது தள்ளிப்போகியுள்ளது.

அதன்படி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தனித்தனியே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே நாளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com