கல்வி
உச்சநீதிமன்ற உத்தரவால் மனநிறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர்
உச்சநீதிமன்ற உத்தரவால் மனநிறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மனநிறைவு தருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உணர்வுகளை மதிக்கும் விதமாக தமிழக பாடதிட்டத்தில் உயிரியல் பயின்றவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது மனநிறைவைத் தருவதாக அமைந்துள்ளது.