ஞாயிறு ஊரடங்கு - டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் சார்நிலைப் பணி தேர்வு 11ம் தேதிக்கு மாற்றம்

ஞாயிறு ஊரடங்கு - டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் சார்நிலைப் பணி தேர்வு 11ம் தேதிக்கு மாற்றம்
ஞாயிறு ஊரடங்கு - டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் சார்நிலைப் பணி தேர்வு 11ம் தேதிக்கு மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் வரும்11-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலால், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறும் என்றும், ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச்சீட்டை கொண்டே அந்தந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதலாம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com