
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 621 எஸ்.ஐ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ((டிஎன்யுஎஸ்ஆர்பி) வெளியிட்டுள்ளது. அதன்படி 469 ஆண் சப்-இன்ஸ்பெக்டர்களும், 152 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜூன் 1.
ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
வயது வரம்பு
20 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். அதேசமயம் 01.07.2023 தேதி கணக்கின்படி 30 வயதை தாண்டியவராக இருக்கக்கூடாது. அதேசமயம் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. BC/ MBC வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இரண்டு வயதும், எஸ்/ எஸ்.டி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரம் கீழே...
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ சோதனையும் நடைபெறும். இதுகுறித்த முழு விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_en.pdf இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.