11ம் வகுப்பு அரையாண்டு தேர்வு: பாடத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார்!

பதினொன்றாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் ஆங்கிலத் தேர்வில் 3 கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. 11 ஆம் வகுப்புக்கான இன்றைய ஆங்கிலத்தேர்வில் 12 ஆம் வகுப்புக்கான 3 கேள்விகள்கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2 மதிப்பெண் கொண்ட 2 கேள்விகளும், 5 மதிப்பெண் கொண்ட ஒரு கேள்வியும் மாற்றி கேட்கப்பட்டுள்ளதால் அந்த கேள்விகளுக்கான 9 மதிப்பெண்களை வழங்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கேள்விகள் கட்டாய கேள்விகள் இல்லை என்றும், அச்சிடும் போது மாற்றி அச்சிடப்பட்டதாகவும் முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com