10,12-ஆம் வகுப்பு மாணவர்கள் பழை பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனாவிற்கு பின் கிட்டத்தட்ட 10 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், 10,12-ஆம் வகுப்பு மாணவர்கள் பழை பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால்கூட பேருந்தில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் கூறினார்.