இதுதவிர 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலை 9.10 முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதேபோல் 11, 12- ம் வகுப்புகளுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதில் முதல் 30 நிமிடம் காலை வணக்கம் கூட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். எனினும், பள்ளிகள் தங்களின் அமைவிடம் போக்குவரத்து வசதிகளை கருத்தில்கொண்டு வகுப்புகள் தொடங்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம். வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.