பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்கள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்கள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்கள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
புதிய கல்வியாண்டில் (2022-23) பள்ளிகள் வேலை நேரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
  • பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே உடற்கல்வி ஆசிரியர்கள் வருகைதந்து மாணவர்களின் ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். 
  • மதிய உணவு இடைவேளை முடிந்தபின் 20 நிமிடம் நூலகங்களில் சிறார் பருவ இதழ், செய்தித்தாள், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும்.
  • வாரம் ஒருநாள் நீதிபோதனை பாடவேளையில் மனநல ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும். அதற்குமுன் பெற்றோர் கூட்டம் நடத்தி குழந்தைகள் கல்வி செயல்பாடு  குறித்து அவர்களிடம் சொல்ல வேண்டும். 
இதுதவிர 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலை 9.10 முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதேபோல் 11, 12- ம் வகுப்புகளுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதில் முதல் 30 நிமிடம் காலை வணக்கம் கூட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். எனினும், பள்ளிகள் தங்களின் அமைவிடம் போக்குவரத்து வசதிகளை கருத்தில்கொண்டு வகுப்புகள் தொடங்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம். வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com