காமராசர் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் சத்தியமூர்த்தி 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு தேர்வு

காமராசர் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் சத்தியமூர்த்தி 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு தேர்வு
காமராசர் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் சத்தியமூர்த்தி 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு தேர்வு

மதுரை காமராசர் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி தமிழக அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் அறிஞர்கள், தமிழ் அமைப்பை ஏற்படுத்தி தமிழ் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாப்போருக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு இவ்விருதை வழங்குகிறது.


இந்நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான விருதிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 45-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பாக்கம் செய்துள்ளார். அதோடு 10 தமிழ் ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். 75க்கும் மேல் சர்வதேச, தேசிய கருத்தரங்குகளில் தமிழ் மொழி சார்ந்த ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தந்தது, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளுடன் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டது உள்ளிட்ட பணிக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com