காரைக்கால் பள்ளி மாணவர்கள்
காரைக்கால் பள்ளி மாணவர்கள்புதியதலைமுறை

புதுச்சேரி | பிரைட் அகாடமி பள்ளியில் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி'.. ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!

மாணவர்களின் அறிவியல் திறனை கண்டறிந்து மேம்படுத்தும் விதமாக காரைக்கால் மாவட்டம் பிரைட் அகாடமி பள்ளியில் புதிய தலைமுறை சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

மாணவர்களின் அறிவியல் திறனை கண்டறிந்து மேம்படுத்தும் விதமாக காரைக்கால் மாவட்டம் பிரைட் அகாடமி பள்ளியில் புதிய தலைமுறை சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவிகளிடம் ஒளிந்திருக்கும் அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் முயற்சியாக புதிய தலைமுறை சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரைட் அகாடமி பள்ளியில் மாநில அளவிலான வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி முதல்வர் பிரதீப் தேவநேயன் விழாவை தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com