எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது . ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்தாய்வை தொடங்கிவைத்தார். மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியானது. சான்றிதழ்கள் சரிபார்த்தபின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.