முன்னதாக தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை 10.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது” எனக் கூறி, வழக்கை வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைத்துள்ளது.