'காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது' - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

'காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது' - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
'காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது' - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

தமிழகத்தில் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ''ஏற்கெனவே அறிவித்தபடி, நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும். 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும்.

பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com