நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு நவ.30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் வரும் நவம்பர் 25 ஆம் தேதி கரையை கடக்கவிருக்கிறது. இதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனை தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது