“குரூப் 2 புதிய தேர்வு முறையால் தமிழ் வழி மாணவர்களுக்கு நன்மை”-டிஎன்பிஎஸ்சி செயலர்..!

“குரூப் 2 புதிய தேர்வு முறையால் தமிழ் வழி மாணவர்களுக்கு நன்மை”-டிஎன்பிஎஸ்சி செயலர்..!

“குரூப் 2 புதிய தேர்வு முறையால் தமிழ் வழி மாணவர்களுக்கு நன்மை”-டிஎன்பிஎஸ்சி செயலர்..!
Published on

தமிழை டிஎன்பிஎஸ்சி புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளின் நடைமுறை மற்றும் பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றப்பட்டன. இதனிடையே குரூப்-2 புதிய பாடத்திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் இளைஞர்களை திரட்டி திமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் ‌தமிழ்மொழித் தேர்வை நீக்கியிருப்பதால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய தேர்வு முறையால் தமிழ் வழி மாணவர்களுக்கு நன்மைதான் ஏற்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அவர்கள்  “குரூப் 2 எழுத்துத் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 6-ஆம் வகுப்பு முதல் படித்த பாடத்திட்டமே தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களால் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் திருக்குறளுக்கு முக்கியத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஒரு மாதத்தில் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com