ஆசிரியர்களுக்கு கிடுக்குப்பிடி - மூச்சு முட்டும் புதிய உத்தரவுகள்

ஆசிரியர்களுக்கு கிடுக்குப்பிடி - மூச்சு முட்டும் புதிய உத்தரவுகள்
ஆசிரியர்களுக்கு கிடுக்குப்பிடி - மூச்சு முட்டும் புதிய உத்தரவுகள்

கடந்த வாரம் ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மண்டல அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் அரசுப் பள்ளிகளில் குடிநீர் பிரச்னை, கழிவறை பிரச்சனை, ஆசிரியர்கள் பற்றாக்குறை என எதைப்பற்றியும் பத்திரிகையாளர்களிடம் வாய் திறக்கக் கூடாது.

மேலும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர உத்தரவு. மாணவர்கள் மோதிரம் அணியவும் தடை. மிக முக்கியமாக வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களை சொந்த வேலைக்கு ஆசிரியர்கள் வெளியே அனுப்ப கூடாது என்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com