மே 6 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

மே 6 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

மே 6 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
Published on

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்தாண்டும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன.

இதனிடையே, நீட் தேர்வில் மாநில பாடத்திட்டதையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 2017-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018-ம் ஆண்டிலும் பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் கொடுத்துவிட்டது.

இந்நிலையில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்தாண்டு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு எழுத வேண்டிய நிலையில்தான் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com