இந்தாண்டு நீட் தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு

இந்தாண்டு நீட் தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு
இந்தாண்டு நீட் தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கு, வரும் ஜூலை 17 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. மே ஏழாம்தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.



கடந்த ஆண்டு 16 லட்சத்து 14 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில் இந்த ஆண்டில் 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com