கல்வி
புதிய கல்விக்கொள்கையில் ஏனோதானோ என்று முடிவெடுக்க முடியாது - அமைச்சர் காமராஜ்
புதிய கல்விக்கொள்கையில் ஏனோதானோ என்று முடிவெடுக்க முடியாது - அமைச்சர் காமராஜ்
புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்த பின்னரே முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த பின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு எல்லா காலத்திலும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு இருமொழிக் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி பெற்று வருகிறது.
புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு உடனடியாக ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது. புதிய கல்வி கொள்கையை ஆய்வு செய்த பின்னரே முடிவு அறிவிக்கப்படும். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து கல்வித்துறை அமைச்சர் முடிவுகளை அறிவிப்பார்.” எனத் தெரிவித்தார்.