பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்றும், தளர்வுகளைப் பொருத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் ப்ளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனத் தெரிவித்தார்.