இந்திய வனப்பணி தேர்வுகள் 2020 : இறுதி முடிவு வெளியீடு!

இந்திய வனப்பணி தேர்வுகள் 2020 : இறுதி முடிவு வெளியீடு!
இந்திய வனப்பணி தேர்வுகள் 2020 : இறுதி முடிவு வெளியீடு!

இந்திய வன பணிக்கான எழுத்துத் தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 2-ம் தேதி முதல்  7-ம் தேதிகள் வரை நடத்தியது. இதற்கான நேர்காணல் கடந்த மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மெரிட் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இந்திய வனப்பணி பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பிரிவில் இருந்து 25 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் இடமிருந்து 10 பேரும், ஓபிசி பிரிவில் இருந்து 34 பேரும், எஸ்சி பிரிவிலிருந்து 13 பேரும், எஸ்டி பிரிவிலிருந்து 7 பேரும் என மொத்தம் 89 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 13 விண்ணப்பதாரர்களின் பரிந்துரைகள் தற்காலிகமானது.

இந்த முடிவுகளை www.upsc.gov.in  என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியல்கள் UPSC இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் வெளியிடப்படும்.

தகவல் : PIB

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com