குரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு

குரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு

குரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு
Published on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப் 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான வயது உச்சவரம்பினை உயர்த்திடுமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதாக கூறினார்.

அதன் அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள வயது உச்சவரம்பினை போல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 1-A, 1-B பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்சி/எஸ்டி/எம்பிசி/பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35 வயதிலிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1-A பிரிவின் கீழ் வன பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1- B தேர்வு மூலம் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் பணியிடம் நிரப்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com