இலவச கட்டாயக் கல்வி: 2 நாள்களில் 13,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பம்

இலவச கட்டாயக் கல்வி: 2 நாள்களில் 13,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பம்
இலவச கட்டாயக் கல்வி: 2 நாள்களில் 13,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பம்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்திட தமிழ்நாட்டில் கடந்த 2 நாள்களில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 8,442 பள்ளிகளில் உள்ள 1.25 லட்சம் இடங்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 86,362 பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com