‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்

‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்
‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்

சென்னையில் வரும் 18ஆம் தேதி அரசு சார்பில் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை கிண்டி அருகே உள்ள தொழிற்பேட்டையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் உள்ளது. இங்கு அவ்வப்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சிகள் உட்பட பல்வேறு தொழிற் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 18ஆம் தேதி தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 

இதுதவிர கட்டண அடிப்படையிலும் சில பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 23ஆம் தேதி அடிப்படை கணக்குகள் மற்றும் டேலி (Tally) நிதி மேலாண்மை கருவிகள் பயிற்சி முகாமும், 30 முதல் 8ஆம் தேதி வரை தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்படவுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com