இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.
இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 17-ம் தேதி தொடங்கி, சிறப்பு பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 23-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. கவுன்சிலிங் துவங்கி, 13 நாட்களை தாண்டி விட்ட நிலையில் மொத்தம் உள்ள 1.75 லட்சம் இடங்களில், இதுவரை 62 ஆயிரத்து 615 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி 1.13 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. 11ம் தேதியுடன் பொது கவுன்சிலிங் முடிகிறது. இந்த 5 நாட்களில், 10 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, கவுன்சிலிங்கின் இறுதியில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.