சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வியால் சர்ச்சை 

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வியால் சர்ச்சை 

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வியால் சர்ச்சை 
Published on
மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு தேர்வுத் தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம்பெற்றுள்ள குறிப்பு மற்றும் கேள்வி குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்த கேள்வித்தாளின் பகுதியை வெளியிட்டு காங்கிரசை சேர்ந்த லட்சுமி ராமச்சந்திரன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில், தற்போது அவ்வாறு இல்லாததால் அதைக் காணும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுகுறிப்பின் இறுதியில் அதற்கு தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில், குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு, வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள், பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் என கேட்கப்பட்டுள்ளன. இதற்கு சிபிஎஸ்இ பதிலளிக்க வேண்டும் என லட்சுமி ராமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com