\
'என்னைக் கவர்ந்தான்'- சிறுவனை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

'என்னைக் கவர்ந்தான்'- சிறுவனை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

'என்னைக் கவர்ந்தான்'- சிறுவனை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

வள்ளுவர் கோட்டத்தை வரைந்த சிறுவன், அதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து பாராட்டு பெற்றார்

இது தொடர்பான தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், " கருணாநிதி அமைத்த வள்ளுவர் கோட்டத்தை வரைந்த மழலை, தமிழ் எழுத்துகள் உள்ள சட்டையோடு, தமிழ்வாழ்க எனக் காட்டி என்னைக் கவர்ந்தான். வளர்க அவர் திறமை என வாழ்த்துகிறேன்.

குழந்தைக்குத் தமிழுணர்வை ஊட்டி வளர்க்கும் உங்கள் குடும்பத்தையும் வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com