குரூப் 4 தேர்வில் முறைகேடு..? - சர்ச்சையில் சிக்கிய 2 தேர்வு மையங்கள்

குரூப் 4 தேர்வில் முறைகேடு..? - சர்ச்சையில் சிக்கிய 2 தேர்வு மையங்கள்
குரூப் 4 தேர்வில் முறைகேடு..? - சர்ச்சையில் சிக்கிய 2 தேர்வு மையங்கள்

‘குரூப் 4’ தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் ‘குரூப் 4’ தேர்வினை 5575 மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வுகளை எழுதினர். இதில் குறிப்பாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் முன்னிலை பெற்றிருக்கிறார்கள். இதில் சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரண்டு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியிருக்கின்றனர்.

அனைத்து முன்னிலை ரேங்க்குகளையும், குறிப்பிட்ட இரண்டு மையங்களில் இருந்தே தேர்ச்சி பெற்றிருப்பதால், இந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றிருக்கிறதா ? என்ற கேள்வியையும், குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com