மருத்துவ மாணவர் சேர்க்கை: அனைத்து மனுக்களும் நாளை விசாரிக்கப்படும்

மருத்துவ மாணவர் சேர்க்கை: அனைத்து மனுக்களும் நாளை விசாரிக்கப்படும்

மருத்துவ மாணவர் சேர்க்கை: அனைத்து மனுக்களும் நாளை விசாரிக்கப்படும்
Published on

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை தொடர்பான வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்சி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் நூட்டி ராம்மோகன்ராவ் மற்றும் எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலும் பல மாணவர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த மனுக்கள் இன்னும் பட்‌டியலிடப்படவில்லை என்பதும் தெரியவந்தது. எனவே அவற்றையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற நீதிபதிகள், எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனைத்து வழக்குகளையும் இதே அமர்வு நாளை விசாரிக்கும் எனத் தெரிவித்தனர். 

மேலும் 85 சதவிகித அரசாணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எந்த நிலையில் இருந்தாலும், நாளை இதே அமர்வில் பட்டியலிட வேண்டுமென உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com