நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
Published on

நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரி சிபிஎஸ்ஈ மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த ஒத்துழைத்துள்ள நிலையில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பதால் மற்ற மாநிலங்களும் இதனை கேட்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், அவசரச் சட்டம் வரவில்லை என்றால் தமிழக அரசு இவ்வழக்கில் கூற ஒன்றும் இல்லை என தெரிவித்து, தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு, அவசர சட்ட முன்வடிவு கொண்டுவருமானால் அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்கு மூன்று மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் தெரிவித்தன. இந்நிலையில் மத்திய அரசு திடீர் பல்டி அடுத்து, நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com